tamilnadu

img

24 பேரை சங்கிலியால் கட்டிப் போட்டு தாக்குதல்... தொடரும் பசு குண்டர்களின் அராஜகம்!

போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில், மற்றுமொரு பசு குண்டர்களின் அராஜகம் அரங்கேறியுள்ளது.மகாராஷ்டிராவில் நடைபெறும் கால்நடைச் சந்தைக்கு, மத்தியப் பிரதேசத்திலிருந்து 20 பசுமாடுகளுடன் வேன் ஒன்றுபுறப்பட்டுச் சென்றுள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் 24 பேரும் வேனில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் காண்ட்வா, ஷேஹோர், தேவாஸ், ஹர்தாமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர் களில் 6 பேர் முஸ்லிம்.இந்நிலையில், மாடுகள் ஏற்றப்பட்டவேன், சாவலிகேடா எனும் கிராமத்திற்குள் வந்தபோது, 100-க்கும் மேற்பட்டோர், வாகனத்தை மறித்து, பசுமாடுகளை கடத்திச் செல்கிறீர்களா, என்றுகேட்டு தகராறு செய்துள்ளனர். மாடுகள்அனைத்தும் தங்களுக்கு சொந்தமானவைதான் என்று வாகனத்தில் இருந்தவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. 

பின்னர், வாகனத்தில் இருந்த 24 பேரையும் கீழே இறக்கி, இரும்புச்சங்கிலியால் கட்டிப்போட்ட அவர்கள், சாலையில் முழங்காலிட வைத்து சித்ரவதை செய்துள்ளனர். ‘கௌ மாதா கீ ஜே’என்று கோஷம் போடுமாறும் நிர்ப்பந்தம் செய்ததுடன், சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கவைத்தே, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கிருந்த போலீசார், “பசு மாடுகள் உங்களுடையதுதான் என்பதற்கு என்னஆதாரம்; ஆவணங்கள் என்ன இருக்கின் றன?”என்று பசு குண்டர்களின் பாணியிலேயே கேள்வி எழுப்பி, முடிவில் மாடுகளை ஏற்றிவந்த 24 பேரையும், ‘மத்தியப்பிரதேச கோவன்ஷ் வத்’ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஆட்டோவில் மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, இஸ்லாமிய ஆண்கள்2 பேரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதுடன், ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுமாறு நிர்ப்பந்தம் செய்த சம்பவம் அண்மையில் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இந்தசம்பவத்தில் பெண் ஒருவரும் தாக்கப் பட்டார்.அதைத்தொடர்ந்து, தற்போது 24 பேரை சங்கிலியால் கட்டிப்போட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கிய சம்பவம் நடந்துள்ளது.